இங்கிலாந்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பயங்கர வெடிவிபத்து
இங்கிலாந்திலுள்ள Skelmersdale என்ற நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.
அவர்களில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனாலும், அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்தில் பல குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து Lancashire தீயணைப்புத் துறையினர் கூறும்போது, நேற்று மாலை 6.00 மணியளவில் நான்கு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைப்பதற்காக அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், என்ன நடந்தது, வெடித்தது என்ன, பாதிக்கப்பட்டது யார் என்பது போன்ற எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.