லண்டனில் நொடிப் பொழுதில் நடக்கவிருந்த பயங்கரமான சம்பவம்! கத்தியுடன் விரட்டிய நபர்கள்: சிசிடிவியில் பதிவான காட்சி
லண்டனில் கத்தியுடன் இரண்டு பேர் விரட்ட, அப்போது அந்த நபர் அங்கே இருக்கும் கபாப் கடைக்குள் நுழைந்து தன்னைக் காப்பாற்றி கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தலைநகரான லண்டனில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில், கத்தியுடன் சிலர் விரட்டி வந்து ஒருவரை குத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கடந்த 2-ஆம் திகதி இரவு உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு முன்னதாக எட்வேர் சாலை பகுதியில் நடந்துள்ளது.
அதில், ஜீன்ஸ் மற்றும் கருப்பு துணி அணிந்த படி செல்லும் நபர், திடீரென்று அங்கிருக்கும் நபர் ஒருவரை தள்ளிவிட்டு, கபாப் கடைக்குள் நுழைகிறார்.
அந்த நொடிப்பொழுதிற்குள், கத்தியுடன் முகமூடி அணிந்த படி விரட்டி வந்த இரண்டு பேர் கத்தியுடன் அவரை தாக்க முயற்சிக்கின்றனர். அந்த கபாப் கடையின் கதவை திறக்க முயற்சிக்கின்றனர்.ஆனால் அது முடியாமல் போகவே உடனே அங்கிருந்து புறப்படுகின்றனர்.
சற்று தாமதித்திருந்தால், அந்த இளைஞனுக்கு மரணம் கூட நேர்ந்திருக்கலாம், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
ஓடி வந்து ஒளிந்து கொண்ட நபர் யார்? அவர்கள் ஏன் கத்தியுடன் விரட்டினர் என்பது குறித்து எந்த ஒரு விபரமுடம் தெரியவில்லை. இந்த வீடியோவுக்கு பின்னரே பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
