புலம்பெயர் மக்களை கொல்லுங்கள்... நாடொன்றில் வெடித்த கலவரத்தின் நடுங்கவைக்கும் பின்னணி
அயர்லாந்தில் மர்ம நபரால் ஐவர் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து வெடித்த கலவரத்தின் பின்னணியில், வெளிநாட்டினரைக் கொல்ல ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலவரத்தை தூண்டிய ஒருவர்
குறித்த விவகாரம் தொடர்பில் வெளியான குரல் குறிப்பு ஒன்று, அதிகாரிகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. கலவரத்தை தூண்டிய ஒருவர், வெளிநாட்டினரை ஆயுதம் ஏந்தி கொல்ல குண்டர்களுக்கு உத்தரவிடுவதாக கூறப்படுகிறது.
@reuters
வியாழன் மாலை 5.22 மணிக்கு தீவிர வலதுசாரி குழுக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் இந்தக் குறிப்பு அனுப்பப்பட்டதாக அம்பலமாகியுள்ளது. இது கத்தி ஏந்திய ஒருவர் மூன்று பாடசாலை மாணவர்களை தாக்கிய பின்னர் நடந்த சம்பவம் என்று கூறப்படுகிறது.
திகிலை ஏற்படுத்திய அந்த கத்திக்குத்து சம்பவம் டப்ளின் நகரம் முழுவதும் மிக மோசமான கலவரத்தைத் தூண்டியது. சுமார் 500 கலவரக்காரர்கள் கடைகளை சூறையாடியதுடன், சுமார் 100 பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
@reuters
புலம்பெயர் மக்களை கொல்லுங்கள்
கார்கள், ஒரு டிராம் மற்றும் ஒரு இரட்டை அடுக்கு பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு நெருப்பு வைத்ததுடன், பாடசாலை மாணவர்களை தாக்கியவர் ஒரு வெளிநாட்டினர் என்ற பிரச்சாரமே இதற்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டது.
டப்ளின் முழுவதும் வன்முறையை அடக்க 400க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டனர். ஆனால் தாக்குதல்தாரி தொடர்பில், அவரது பின்னணி குறித்து எந்த தகவலையும் அதிகாரிகள் தரப்பு வெளியிடவில்லை.
@getty
டெலிகிராம் செயலியில், புலம்பெயர் மக்களை கொல்லுங்கள் என்ற குரல் குறிப்பு மட்டும் வெளியாகி, டப்ளின் நகரை கலவர பூமியாக மாற்றியது என்ற அதிர்ச்சி பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |