என் உயிருக்கு ஆபத்து என கூறிய இம்ரான் கான்.. சதித்திட்டம் தீட்டிய கும்பல்! அம்பலமான உண்மை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொல்ல பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தினால் பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் ஷபாஸ் ஷெரீப் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
அதனைத் தொடர்ந்து இம்ரான்கானின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இம்ரான் கானை கொல்ல பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பயங்கரவாத தடுப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த துறையின் கைபர் பக்துன்க்வா பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பயங்கரவாதிகள் இம்ரான் கானை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஒரு கொலையாளியின் உதவியை நாடியுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்ரான்கானுக்கு எதிரான எச்சரிக்கை வாசகம் பல்வேறு அமைப்புகளுடன் பகிரப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Photo Credit: Getty Images
இதனைத் தொடர்ந்து, இம்ரான் கானின் பாதுகாப்பிற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, சம்பத்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் பயங்கரவாத தடுப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் பயாஸ் சோகன் இந்த சதித்திட்டம் குறித்து கூறும்போது, 'இம்ரான்கானை கொல்ல சிலர் பயங்கரவாதியை நாடி உள்ளது கவலை அளிக்கும் விடயம். அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளர்.
ஏற்கனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என இம்ரான் கான் கூறியிருந்த நிலையில், தற்போது அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது அம்பலமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Photo Credit: Reuters