பிரபல தீவில் சடலமாக கிடந்த சுவிஸ் பெண்! என்ன நடந்தது? விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த அதிர வைக்கும்
தாய்லாந்தில் நீர்வீழ்ச்சிக்கு அருகே சுவிஸ் பெண் சடலமாக கிடந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 6ம் திகதி தாய்லாந்தின் பிரபல சுற்றுலாத் தீவான Phuket-ல் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகே சுவிஸ் பெண் சடலம் கருப்பு போர்வையில் மூடிவைக்கப்பட்டிருந்ததை பொலிசார் கண்டெடுத்தனர்.
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய வைத்த பொலிசார், கொல்லப்பட்ட கிடந்த பெண் 57 வயதான Nicole Sauvain-Weisskopf என்ற சுவிஸ் சுற்றுலா பயணி என தகவல் தெரிவித்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணை முடக்கிவிடப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில், Sauvain-Weisskopf-ஐ கொலை தொடர்பாக தாய்லாந்தைச் சேர்ந்த Theerawut Tortip (27) மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததின் மூலம் Theerawut Tortip பிடித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதாவது, Sauvain-Weisskopf நீர்வீழ்ச்சிக்குச் சென்ற அதே நேரத்தில் ஒரு பைக் காணப்பட்டதாகவும், பைக்கின் உரிமையாளர் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Theerawut Tortip சிக்கினார்.
Theerawut Tortip கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைியல் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட Theerawut Tortip மீது கொலை மற்றும் கொள்ளை மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஏனெனில் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை என்று துணை தேசிய பொலிஸ் செய்தித் தொடர்பாளர் Kissana கூறினார்.
தனது வழக்கறிஞருடன் தொலைபேசியில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட Theerawut Tortip, Sauvain-Weisskopf-ஐ கழுத்தை நெரித்து கொன்று சுமார் 300 பாட் எடுத்ததாக கூறினார்.
Sauvain-Weisskopf-ன் குடும்பத்தினரிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், அனைத்து தாய்லாந்து மக்களும் என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.