”தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்” உலகெங்கும் தமிழர்கள் உற்சாக கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று போகிப் பண்டிகையன்று, வீ்ட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை தீயிட்டு கொளுத்தினர்,
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற சான்றோர் வாக்கின்படியும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி, நல்ல எண்ணங்கள் மேலோங்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு படையலிட்டு, இப்பண்டிகையை மகிழ்ச்சி பொங்க மக்கள் இன பேதமின்றி உறவினர்களுடன் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளும் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.