தாய்லாந்தில் இரண்டாக பிளந்த பேருந்து: விபத்துக்குள்ளான 14 பேர் பலி
தாய்லாந்தின் பிரச்சுவாப் கிரி கான் மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, மரத்தில் மோதி, பாதியாகப் பிளந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து
தாய்லாந்தில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 14 பேர் பலியாகியதுடன், 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.
SAWANG PRACHUAP DHAMMASATHAN FOUNDATION
தாய்லாந்தின் மேற்கு மாகாணமான பிரசுவாப் கிரி கான் பகுதியில் நள்ளிரவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்திற்குப் பிறகு பேருந்தின் முன்பகுதி பாதியாகப் பிளவுபட்டுள்ளது.
SAWANG PRACHUAP DHAMMASATHAN FOUNDATION
ஓட்டுநருக்கு போதுமான தூக்கம் இல்லாத காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |