விசா கட்டுப்பாடுகளை தங்களுக்குள் நிரந்தரமாக நீக்கிய இரண்டு பிரபலமான ஆசிய நாடுகள்
ஆசிய நாடுகளான தாய்லாந்தும் சீனாவும் பரஸ்பர குடிமக்களுக்கான விசா கட்டுப்பாடுகளை நிரந்தரமாக நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசா தேவைகள் இருக்காது
தொடர்புடைய தகவலை தாய்லாந்தின் பிரதமர் Srettha Thavisin செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இரு நாடுகளுக்கிடையே விசா கட்டுப்பாடுகள் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
@reuters
சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள, தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார நிலை கொண்ட தாய்லாந்து, செப்டம்பரில் சீன சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டுப்பாடுகளை 2024 பிப்ரவரி மாதம் வரை தள்ளுபடி செய்திருந்தது.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே விசா தேவைகள் இருக்காது என்பது இரு நாட்டு உறவையும் மேலும் அதிகரிக்க செய்யும் என்றார் பிரதமர் Srettha Thavisin.
இந்த நிலையில், இரு நாடுகளும் விசா தேவைகளை பரஸ்பரம் விலக்கு அளித்து மக்களிடையே பரிமாற்றத்தை மேம்படுத்தி வருவதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
34.93 பில்லியன் டொலர் வருவாய்
மேலும், உரிய ஏற்பாட்டைச் செயல்படுத்துவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. தாய்லாந்தில் 2023ல் மட்டும் 28 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விஜயம் செய்துள்ளனர்.
Credit Xinhua
இதனால் சுமார் 34.93 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளது. இதில் மலேசியாவில் இருந்து மட்டும் 4.5 மில்லியன் மக்கள் தாய்லாந்து சென்றுள்ளனர். சீன மக்கள் 3.5 மில்லியன் பேர்கள் தாய்லாந்து சென்றுள்ளனர்.
ஆனால் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னால் உலகெங்கிலும் இருந்து 39 மில்லியன் மக்கள் தாய்லாந்து சென்றுள்ளனர், இதில் 11 மில்லியன் மக்கள் சீனாவில் இருந்து என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |