தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளித்த ஆசிய நாடு! மசோதா நிறைவேற்றம்
தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆசிய நாடான தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவிற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு பின் 415 உறுப்பினர்களில் 400 பேர் ஆதரவாக வாக்களித்தனர். எனவே, எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணம் செய்தால், அவர்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை சட்டப்பூர்வமாக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இதன்படி சட்டத்தில் உள்ள திருமண பந்தம் தொடர்பிலான வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன. அதாவது ஆண்கள், பெண்கள் என இதுவரை இருந்த வார்த்தைகள் தனிநபர் மற்றும் வாழ்க்கை துணைவர்கள் என மாற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், தெற்காசியாவில் இச்சட்டத்தை நிறைவேற்றிய முதல் நாடு எனும் பெயரை தாய்லாந்து பெறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |