ஜேர்மனியில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
கொரோனா காரணமாக அறிமுகப்படுத்தப்பப்ட தொடர் ஊரடங்கால் 2020-க்கான தேசிய காலநிலை மாற்றத்திற்கான இலக்கை எட்டியுள்ளது ஜேர்மனி.
மூன்று தசாப்தங்களாக இல்லாத அளவிற்கு மாசு மிகப்பெரிய அளவில் குறைய கொரோனா தொற்றுநோய் உதவியதால் ஜேர்மனி 2020 ஆம் ஆண்டிற்கான அதன் தேசிய காலநிலை இலக்கை அடைந்துள்ளது.
பசுமை இல்ல வாயு மாசு கடந்த ஆண்டு 1990 நிலைகளை விட 41 சதவீதம் குறைவாக இருந்தது, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரே ஆண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு இது என்று ஜேர்மனி சுற்றுச்சூழல் அமைச்சர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று மாசுபாட்டை குறைப்பதைத் தூண்டியுள்ளது என்பது தெளிவாகிறது என்று ஜேர்மனி சுற்றுச்சூழல் அமைச்சர் Svenja Schulze கூறினார், அதேசமயம் இதனால் நிம்மதியடைய எந்த காரணமும் இல்லை என்று எச்சரித்தார்.
பேரழிவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் விவேகமான காலநிலைக் கொள்கையையும் நமது பொருளாதாரத்தின் நிலையான மறுசீரமைப்பையும் மாற்ற முடியாது என்று அவர் கூறினார்.