ஏலத்தில் வாங்கிய பெட்டிக்குள் இருந்த சிறுவர்களின் உடல்கள்: உறவினர்கள் ஆசிய நாட்டவர்கள் என தகவல்...
நியூசிலாந்து தம்பதியர் ஏலம் எடுத்த பெட்டிக்குள் இரண்டு சிறுவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு.
தற்போது, அந்த சிறுவர்களின் உறவினர்கள் ஆசியாவில் இருப்பது தெரியவந்துள்ளது.
நியூசிலாந்தில் ஒரு தம்பதியர் ஆர்வமுடன் பெட்டி ஒன்றை ஏலம் எடுத்த நிலையில், அதற்குள் இரண்டு சிறுவர்களின் உடல்களின் எச்சங்கள் இருப்பது தெரியவந்ததால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
ஆக்லாந்திலுள்ள அந்த வீட்டுக்கு விரைந்த பொலிசார் உடனடியாக விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள்.
அதைத் தொடர்ந்து, பெட்டிக்குள் அடைக்கப்பட்டு உயிரிழந்த அந்த சிறுவர்களுக்கு ஐந்திலிருந்து பத்து வயதுக்குள் இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
Credit: NZ Herald
இந்நிலையில், தற்போது அந்த சிறுவர்களின் உறவினர்கள் ஆசியாவிலிருப்பது தெரியவந்துள்ளது. அந்த பிள்ளைகளை பெட்டிக்குள் அடைத்தது யார், அந்தப் பெட்டி எப்படி நியூசிலாந்திலுள்ள சேமிப்பகத்தை வந்தடைந்தது, பிள்ளைகள் கொலை செய்யப்பட்டார்களா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அந்த பெட்டியிலிருந்த உடல்கள் DNA சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நியூசிலாந்து பொலிசார் இண்டர்போல் அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளார்கள்.
Credit: NZ Herald