பிரதமராக பதவியேற்றதும் ரிஷி செய்யவேண்டிய முதல் பயங்கர வேலை: சீரியஸான ஒரு தகவல்...
ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றதும் அவருடைய முதல் வேலை என்னவாக இருக்கும்?
இப்போதைக்கு நாட்டில் மிக முக்கிய பிரச்சினை பொருளாதாரம்தான்.
இப்போதைக்கு பிரித்தானியாவில் முக்கிய பிரச்சினை பொருளாதாரம்தான்.
ஆகவே, ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றதும் அவருடைய முதல் வேலை பொருளாதாரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுப்பது தொடர்பானதாகத்தான் இருக்கும் என்றுதான் நம்மில் பலரும் நினைப்போம்.
ஆனால், உண்மையில் பிரதமராக ரிஷியின் முதல் வேலை அது அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், அவர் ஒரு சீரியஸான வேலையை முதல் வேலையாக செய்தாகவேண்டும். அது பிரித்தானியாவின் பாதுகாப்பு குறித்தது.
உக்ரைன் ஜனாதிபதி புடின், தங்கள் நாட்டின் இருப்புக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில், அணு ஆயுதம் பிரயோகித்தாவது தங்கள் நாட்டைக் காப்போம் என கூறியுள்ளது நினைவிருக்கலாம்.
உண்மையில், எல்லா நாடுகளுமே தங்கள் பாதுகாப்புக்குத்தான் அவ்வளவு முன்னுரிமை கொடுக்கின்றன, கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
ஆக, பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கின் முதல் வேலை, பிரித்தானியாவுக்கு அணு ஆயுத தாக்குதல் மூலம் ஆபத்து வரும் பட்சத்தில், அதை எதிர்கோள்வதற்காக என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பிரித்தானியாவுக்குச் சொந்தமான ஏவுகணை வீசும் திறன் கொண்ட நான்கு நீர்மூழ்கிக்கப்பல்களின் தளபதிகளுக்கு கடிதங்கள் எழுதுவதாகும்.
ஒவ்வொரு முறை பிரித்தானியாவுக்கு புதிதாக ஒருவர் பிரதமராக பொறுப்பேற்கும்போதும், ஏற்கனவே எழுதப்பட்ட கடிதங்கள் அழிக்கப்பட்டு, புதிய பிரதமரால் புதிய கடிதங்கள் எழுதப்படும்.
தெரஸா மே பிரதமராக இருக்கும்போது, 100,000 அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அழிக்கக்கூடிய அணு ஆயுத தாக்குதலை நீங்கள் உத்தரவிடுவீர்களா எனகேள்வி எழுப்பப்பட்டதாம்.
அப்போது, ஆம், உத்தரவிடுவேன், நாம் அணு ஆயுதம் பிரயோகிப்போம் என்பதை நமது எதிரிகள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் அதன் ஒரே நோக்கம் என்று வேதனையுடன் பதிலளித்தாராம் அவர்.