பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்குக்காக பிரித்தானியா வந்துள்ள முதல் உலகத் தலைவர்
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் உலகத்தலைவர்கள், பிரபலங்கள் என 500 பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
மகாராணியாரின் இறுதிச்சடங்குக்காக நேற்றே பிரித்தானியாவுக்கு வந்துவிட்டார் நியூசிலாந்து பிரதமர்.
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு, திங்கட்கிழமையன்று (19.9.2022) அன்று நடைபெற உள்ளது.
அந்த நிகழ்ச்சியில் உலகத்தலைவர்கள், பிரபலங்கள் என 500 பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இந்நிலையில், மகாராணியாரின் இறுதிச்சடங்குக்காக நேற்றே பிரித்தானியாவுக்கு வந்துவிட்டார் நியூசிலாந்து பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்ன்.
மகாராணியாரின் இறுதிச்சடங்குக்காக முதலில் வந்த உலகத் தலைவர் ஜெசிந்தாதான்.
அத்துடன், மற்றவர்களைப்போலவே நேற்று வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திய அவர், மகாராணியாரின் உடலின் அருகில் வந்ததும், குனிந்து, மறைந்த மகாராணியாருக்கு மரியாதையும் செலுத்தினார்.
மகாராணியாரின் இறுதிச்சடங்குக்காக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், சீனாவின் துணை ஜனாதிபதி Wang Qishan, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான Ursula von der Leyen முதலான 30 தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
மகாராணியாரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி புடின் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைனின் முதல் பெண்மணியான Olena Zelenskyக்கு அழைப்பு அனுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.