ஆளுநரை பளார் என கன்னத்தில் அறைந்த நபர்! பதவியேற்பு மேடையில் நடந்த பரபரப்பு சம்பவம்.. வைரலாகும் வீடியோ
ஈரானில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநரை மேடையில் ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஈரானில் புதிதாக பொறுப்பேற்ற ஆளுநரை பதவியேற்பு விழா மேடையில் ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடமேற்கு ஈரானிய மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோராம் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து நடந்த பதவியேற்பு விழாவில் அபிதின் கோராம் மேடையில் பேசி கொண்டிருந்தார். அப்போது மேடை ஏறிய ஒருவர் அவரை நோக்கி சென்று திடீரென கன்னத்தில் பளார் என அறைந்தார்.
உடனடியாக பாதுகாப்பில் இருந்த காவல் அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து அழைத்து சென்றனர். ஆளுநரை அறைந்த நபரின் பெயர் அயுப் அலிஜாதே என்று தெரிய வந்துள்ளது.
Abedin Khorram, the new governor general of Iran's East Azarbayjan Province, was slapped in the face by a member of the audience during his inauguration ceremony this morning. pic.twitter.com/opJgTpNl8S
— Kian Sharifi (@KianSharifi) October 23, 2021
ஆனால் அவர் ஆளுநரை தாக்கியதற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் தனது மனைவிக்கு ஆன் மருத்துவர் ஒருவர் மருத்துவம் செய்த கோபத்தில் அவர் இந்த தவறை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.