துப்பாக்கியால் சுட்டு திருமண பார்ட்டி கொண்டாடிய நபர்: மணமகனுக்கு நேர்ந்த துயர முடிவு
தனது உறவினர் ஒருவரின் திருமண பார்ட்டியில், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஒருவர். ஆனால், அவர் சுட்டதில் ஒரு குண்டு தாக்கி மணமகன் உயிரிழந்துவிட்டார்.
திருமணத்துக்கு முன்பே உயிரிழந்த மணமகன்
ஜோர்டான் நாட்டில், Hamza Sattam Hamed Al-Fanatsa (20) என்னும் நபருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு முந்தைய நாள் நண்பர்களும் உறவினர்களும் கூடி பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார்கள்.
அப்போது, மணமகனின் உறவினர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்பாராதவிதமாக, திடீரென ஒரு குண்டு மணமகன் Hamzaவின் மார்பில் பாய்ந்துள்ளது. உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் அவர்.
இந்த சம்பவம் நடக்கும்போது, மணமகள் பியூட்டி பார்லர் ஒன்றிற்குச் சென்றிருந்திருக்கிறார். மறுநாள் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் உயிரிழந்த சம்பவம் இரு குடும்பங்களிலும் கடும் துயரத்தை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில் துப்பாக்கியுடன் நடனமாடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |