ஆவிகள் மீது நம்பிக்கையில்லாத பிரித்தானியரை திகிலடைய வைத்த சம்பவம்
ஆவிகள் மீது நம்பிக்கையில்லாத பிரித்தானியர் ஒருவர், தன் கல்லூரி நாட்களில் தான் சந்தித்த பயங்கர அனுபவத்தைக் குறித்து விவரித்துள்ளார்.
வட அயர்லாந்தின் தலைநகரமான பெல்ஃபாஸ்டில் அமைந்துள்ள Queen's பல்கலைக்கழகத்தில் பயின்ற Ken என்பவர், ஆவிகள் மீது நம்பிக்கை இல்லாதவர்.
ஆனால், அவர் தங்கியிருந்த ஹாஸ்டல் அறையில் அவர் சந்தித்த அனுபவங்கள், இப்போது நினைத்தாலும் தன்னை திகிலடைய வைப்பதாக தெரிவித்துள்ளார் அவர்.
ஒரு நாள் தான் படுக்கையிலிருக்கும்போது, திடீரென கண்ணைத் திறந்துபார்க்கும்போது, ஜன்னலருகே ஒரு உருவத்தைப் பார்த்திருக்கிறார் Ken.
அப்படி ஒரு கருப்பை நான் பார்த்ததில்லை என்று கூறும் Ken, கருப்பென்றால் கருப்பு அந்த உருவம் அப்படி ஒரு கருப்பு என்கிறார்.
அப்போது பயங்கரமான ஒலி ஒன்று கேட்க, உடல் குப்பென வியர்க்க, ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை மேற்கொள்வதை உணர்ந்திருக்கிறார் அவர். அதிலும் ஆச்சரியமான விடயம், அந்த சக்தி தன்னை மேற்கொள்ளும்போது, அவருடைய போர்வையின் மடிப்பும் அவரை நோக்கி அழுத்தியபடி மேல் நோக்கி நகர்ந்துள்ளது.
அது தோள் வரை வர, பயத்தில் நம்பிக்கை அற்றுப்போக, தன்னை அது ஏதோ செய்யப்போகிறது என்பதை உணர்ந்த Ken, பலமாக அதை உதைத்துத் தள்ள, சட்டென எல்லாமே விலக, அந்த உருவமும் மறைந்துபோயிருக்கிறது. அவருடைய அறையில் தங்கியிருந்த மற்றொரு நபரும் ஏதோ ஒரு பயங்கர உணர்வுக்குள்ளானதாக கூறியுள்ளார்.
அடுத்த நாள் அதைவிட பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிப்டில் யாரோ வருவதும் லிப்ட் திறப்பதும் தெரிய, யாரோ முரட்டுத்தனமாக Kenஉடைய அறைக்கதவைத் தட்டியிருக்கிறார்கள், காலால் உதைத்திருக்கிறார்கள். அசட்டு தைரியத்தில் கதவைத் திறந்து பார்த்தால், யாரும் அங்கில்லை, ஆனால், லிப்ட் மட்டும் அவர் இருந்த தளத்தில் வந்து நின்றிருக்கிறது.
பிறகு விசாரிக்கும்போது, அந்த அறையில் இதற்கு முன் தங்கியிருந்த மூவர் இறந்துபோனதாக தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் ஜன்னலிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்பட்டதாகவும் பின்பு தெரிந்துகொண்டுள்ளார் Ken.
இதுபோல் பல இயற்கைக்கு மாறான விடயங்களை அனுபவித்த Ken, பிறகு அந்த பல்கலைக்கழக படிப்பை முடித்துச் சென்ற பிறகு, அவருக்குப் பின்னால் அங்கு தங்கியவர்களும், பாத்திரங்கள், கத்திகள், முள் கரண்டிகள் முதலானவை பறப்பது போன்ற விடயங்களை அனுபவித்திருக்கிறார்கள்.
இப்போது நினைத்தாலும், அந்த விடயங்கள் தன்னை திகிலடைய வைப்பதாகத் தெரிவிக்கிறார் Ken.