தேடிவந்த இலட்சாதிபதி அதிர்ஷ்டம்... உண்மை தெரியாமலே உயிரிழந்த பிரித்தானியரின் துரதிர்ஷ்டம்
பிரித்தானியர் ஒருவருக்கு லொட்டரியில் பெருந்தொகை ஒன்று பரிசாக கிடைத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தான் இலட்சாதிபதியாகியுள்ள விடயம் தெரியாமலே உயிரிழந்துவிட்டார் அவர்.
7.9 மில்லியன் பவுண்டுகள் பரிசுத்தொகை
வட Lanarkshireஇலுள்ள Wishaw என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த ஆண்ட்ரூ (Andrew Gillion, 59), தன் நண்பர்களுடன் சேர்ந்து லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த லொட்டரிச்சீட்டுக்கு 7.9 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது. அதில், ஆண்ட்ரூவின் பங்காக 8,092 பவுண்டுகள் கிடைத்துள்ளன.
இலட்சாதிபதியாகியுள்ள விடயம் தெரியாமலே மரணம்
ஆனால், தான் இலட்சாதிபதியான விடயம் ஆண்ட்ரூவுக்குத் தெரியும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டார். ஆம், நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்த ஆண்ட்ரூ, அவரது வீட்டுப் படிக்கட்டுகளில் தவறிவிழுந்து, கழுத்து எலும்பு உடைந்து மரணமடைந்துவிட்டார்.
அதிர்ஷ்டம் தேடிவந்தும், துரதிர்ஷ்டவசமாக அதை அனுபவிக்காமலே போய்விட்டார் ஆண்ட்ரூ.
Credit: Mirrorpix
என்றாலும், அந்தத் தொகை ஆண்ட்ரூவின் மகளான லிசா (Lisa Thomas)க்கு கிடைத்துள்ளது.
அப்பா லொட்டரிச்சீட்டு வாங்குவதைக் குறித்து எப்போதும் அவரை விளையாட்டாக கேலி செய்வாராம் லிசா. அப்போதெல்லாம், ஒருநாள் எனக்கு பரிசு கிடைக்கும், அப்போது நீ சிரிக்கமாட்டாய் இல்லையா என்பாராம் ஆண்ட்ரூ.
அதை நினைத்து கண்ணீர் விடும் லிசா, அவர் சொன்னதுபோலவே அவருக்கு லொட்டரியில் பரிசு கிடைத்துள்ளது, அவர் சொன்னது உண்மைதான், நான் சிரிக்கவில்லை, அழுதுகொண்டுதான் இருக்கிறேன் என்கிறார்.