பிரித்தானியாவில் காணாமல் போன இளம்தாயார் இறந்துவிட்டார் என தகவல்! சடலத்தை தேடும் பொலிசார்... வெளியான புகைப்படம்
பிரித்தானியாவில் காணாமல் போன இளம் தாயார் மற்றும் அவர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சடலங்களை தொடர்ந்து பொலிசார் தேடி வருகிறார்கள்.
கிளவுஸிஸ்டர்ஷியர் கவுண்டியை சேர்ந்த பென்னிலின் புர்க் (25) மற்றும் அவரின் மகள் ஜெல்லிகா (2) ஆகியோர் கடந்த 1ஆம் திகதி காணாமல் போனதாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் கடைசியாக இருவரும் கடந்த மாதம் 17ஆம் திகதி தான் காணப்பட்டனர். காணாமல் போனவர்களை தேடும் வழக்காக இதை பதிவு செய்திருந்த பொலிசார் தற்போது கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.
இதனால் இருவரும் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
புர்க்கின் இன்னொரு குழந்தை பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதனிடையில் தாய் மற்றும் மகளின் இறப்பு தொடர்பாக 50 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்
. தொடர்ந்து இரண்டு பேரின் சடலங்களையும் பொலிசார் தேடி வருகின்றனர். இது குறித்து டிடெக்டிவ் சூப்பர்டண்ட் கிரம் மெக்கி கூறுகையில், காணாமல் போன இருவர் தொடர்பான விசாரணையை கொலை விசாரணையாக மாற்றியுள்ளோம்.
இது குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தயவு செய்து முன் வந்து எங்களிடம் பேசுமாறு கேட்டு கொள்கிறோம்.
எங்கள் எண்ணங்கள் புர்க்க்கின் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இந்த கடினமான நேரத்தில் இருக்கும் என கூறியுள்ளார்.
