மகனை, தம்பியுடன் சேர்ந்து துடி துடிக்க கொலை செய்த தாய்! திருமண தொல்லையால் நடந்த பயங்கர சம்பவம்
இந்தியாவில் திருமணம் செய்து வைக்ககோரி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த மகனை, தாய் தனது தம்பியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மண்டலம் புலமடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமம்மா. இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகனான சிவபிரசாத் மது பழக்கத்திற்கு அடிமையானவர்.
இதனால் தினமும் குடிப்பதற்காக பணம் கேட்டு லட்சுமம்மாவை தொந்தரவு செய்து வந்ததுடன், திருமணம் செய்து வைக்கும் படியும் சண்டை போட்டு வந்துள்ளார்.
இப்படி தினமும் சிவபிரசாத் செய்து வந்ததால், முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த லட்சுமம்மா
சங்கா ரெட்டி மாவட்டம் திக்வேல் கிராமத்தில் வசிக்கும் தன்னுடைய தாய் தம்பி பூபாலை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதன் பின், தனது உறவினர்களான ஸ்ரீசைலத்தை சேர்ந்த அனந்தரமுலு, பக்காய்யா மற்றும் பூபால் ஆகியோருடன் சேர்ந்து தனது மகன் சிவபிரசாத்தைக் லட்சுமம்மா கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் அவர்களுக்கு கொடுத்துள்ளார்.
