கனடாவிலுள்ள வீடு ஒன்றிற்கு வருகை புரிந்த நெதர்லாந்து இளவரசி: பின்னணியில் ஒரு சுவாரஸ்ய தகவல்
நெதர்லாந்து இளவரசியான Margriet, கனடாவின் தலைநகரான Ottawaவுக்கு வருகை புரிந்துள்ளார்.
நெதர்லாந்து ராஜ குடும்பம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டூலிப் மலர்களை கனடாவுக்கு அனுப்புவதுண்டு.
அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு உள்ளது. அதாவது, 1944-1945ஆம் ஆண்டுகளில், நெதர்லாந்தின் விடுதலைக்காக கனேடியர்கள் போராடியுள்ளார்கள். அப்படி போராடியதில் 7,600 கனேடியர்கள் உயிர்த்தியாகமும் செய்துள்ளார்கள். அதற்கு நன்றிக் கடனாகத்தான் ஆண்டுதோறும் நெதர்லாந்து ராஜ குடும்பம் ஆயிரக்கணக்கான டூலிப் மலர்களை கனடாவுக்கு அனுப்பி வருகிறது.
இன்னொரு சுவாரஸ்யமான விடயம், நெதர்லாந்து இளவரசியான Margriet, Ottawaவில்தான் பிறந்துள்ளார். ஆம், இரண்டாம் உலகப்போரின்போது நெதர்லாந்து ராஜ குடும்பம் நாஸிக்களிடமிருந்து உயிர்தப்ப கனடாவுக்கு ஓடிவந்துள்ளது. அப்போது, Ottawaவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் Margriet பிறந்துள்ளார்.
ஆகவே, தான் பிறந்தபோது தங்கள் குடும்பம் வாழ்ந்த வீட்டிற்குச் சென்று அங்கு டூலிப் மலர்ச்செடிகளை நட்டுள்ளார் Margriet.
அந்த வீடு தற்போது கனடாவின் எதிர்க்கட்சித் தலைவருடைய வீடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி யோகரட்ணம் தில்லைநாதர் மூர்த்தி
Ipoh, Malaysia, London, United Kingdom, சென்னை, India, கொழும்பு
09 May, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022