கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனிக்கிடையே உருவாகியுள்ள புதிய பிளவு: காரணம் என்ன?
கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் இணைந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்நிலையில், கிழக்கு ஜேர்மனி என அழைக்கப்பட்ட பகுதிகளில் ஜேர்மன் மக்களாட்சிக்கு எதிரான அதிருப்தி அதிகரித்தவண்ணம் உள்ளது.
கிழக்கு ஜேர்மன் மாகாண தலைவர்கள், ஜேர்மனி இணைந்ததால் உருவான வெற்றிகளை ஆற்றல் பிரச்சினை அபாயத்திற்குள்ளாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
சமீபத்தில் 4,000 மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், கிழக்கு ஜேர்மனிப் பகுதியில் வாழ்பவர்களில் 39 சதவிகிதத்தினர் மட்டுமே ஜேர்மனியில் நடைபெற்றுவரும் மக்களாட்சி திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த எண்ணிக்கை 9 புள்ளிகள் அதிகமாக இருந்தது. மேற்கு ஜேர்மனியிலோ, திருப்தி குறைந்திருந்தாலும், 65 சதவிகிதத்திலிருந்து 59 சதவிகிதமாக மட்டுமே குறைந்துள்ளது.
அதேபோல், கிழக்கு ஜேர்மனியில் 26 சதவிகிதத்தினர் மட்டுமே, பெடரல் அரசின் தற்போதைய கொள்கைகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
கிழக்கு ஜேர்மனியில் 23 சதவிகிதத்தினரும், மேற்கு ஜேர்மனியில் 33 சதவிகிதத்தினரும் மட்டுமே நாட்டின் சமூக நீதி திருப்தியளிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
சமீபத்தில் விழா ஒன்று தொடர்பில் ஒன்று கூடிய கிழக்கு ஜேர்மன் மாகாண தலைவர்கள், ஜேர்மனி இணைந்ததால் உருவான வெற்றிகளை, தற்போதைய ஆற்றல் பிரச்சினை இழக்கச் செய்துவிடுமோ என, கிழக்கு ஜேர்மனியில் வாழும் மக்கள் பலர் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.