கொரோனாவால் இறந்த நபர் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம்!
இந்தியாவில் மூளை ரத்தக்கசிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்துவிட்டதாக அறிவித்ததோடு, அவரது குடும்பத்தினரிடம் மரண சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.
ஏப்ரல் 3-ம் திகதி பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் (PMCH) 40 வயதான சுன்னு குமார் மூளை ரத்தக்கசிவு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
மறுநாள் அவர் கோவிட் காரணமாக இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறப்பு சான்றிதழுடன் சடலமும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், சுடுகாட்டில் தகனத்தின்போது அவரது உறவினர்கள் குமாரின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என வற்புறுத்தினர்.
அப்போது, இறந்த உடல் வேறு ஒருவரின் உடல் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் விசாரித்ததில் சுன்னு குமார் இன்னும் மருத்துவமனையில் இருப்பதை தெரிந்துகொண்டனர். மேலும் அவருக்கு பதிலாக கொரோனாவால் இறந்த வேறொருவரது உடலை மாற்றி கொடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தால் ஆத்திரமடைந்த சுன்னு குமாரின் குடும்பத்தினர் மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியம் குறித்து குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இந்த அலட்சியமாக செயல்களை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று PMCH கண்காணிப்பாளர் டாக்டர் ஐ.எஸ். தாக்கூர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.