அந்த துயரத்தில் இருந்து அவர் மீளவே இல்லை, இறுதிவரை... ராணியார் மரணம் குறித்த புதிய பின்னணி
இளவரசர் பிலிப்பின் ஆதவு இல்லாமல், இத்தனை ஆண்டு காலம் ராணியாராக பொறுப்பில் இருந்திருக்க முடியாது
இளவரசர் பிலிப் காலமான பின்னர், ராணியார் எலிசபெத் நடவடிக்கையில் மாற்றம் காணப்பட்டதாக அரண்மனை
இளவரசர் பிலிப் காலமான பின்னர் மனம் உடைந்தே காணப்பட்ட ராணியார், அதில் இருந்து இறுதிவரையில் மீளவே இல்லை என ராஜகுடும்பத்து பதிவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இளவரசர் பிலிப் காலமான பின்னர், ராணியார் எலிசபெத் நடவடிக்கையில் மாற்றம் காணப்பட்டதாகவும், அவர் எப்போதும் போல இல்லை என்றே அரண்மனை வட்டாரத்திலும் கூறப்படுகிறது.
@getty
மேலும், ராணியாரின் பலமும் கேடயமும் இளவரசர் பிலிப் தான் என கூறுகிறார், ராணியார் தொடர்பில் புத்தகம் ஒன்றை வெளியிடவிருக்கும் ஆசிரியர் ஒருவர். இளவரசர் பிலிப் காலமான பின்னர் ராணியார் வெகுவாக மாறிவிட்டார் எனக் கூறும் அவர், ராணியார் வாழ்க்கையில் முன்னெடுத்த எல்லாவற்றிலும் இளவரசர் பிலிப் அவரை ஆதரித்தார் என்றே தெரிவித்துள்ளார்.
மேலும், இளவரசர் பிலிப்பின் ஆதவு இல்லாமல், இத்தனை ஆண்டு காலம் ராணியாராக பொறுப்பில் இருந்திருக்க முடியாது என்றே குறித்த ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், ராணியாரின் உடல் அவரது பெற்றோர் மற்றும் இளவரசர் பிலிப்பின் உடலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு, தற்போது பெயர்ப்பலகையும் வெளியிடப்பட்டுள்ளது.
@Shutterstock
இதனிடையே, ராணியாரை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சிற்றாலயமானது பொதுமக்கள் பார்வைக்காக அடுத்த வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளது. பெரியவர்களுக்கு 28.50 பவுண்டுகள் கட்டணமும் சிறார்களுக்கு 15.50 பவுண்டுகள் கட்டணமும் வசூலிக்க உள்ளனர்.
இதில் இருந்து வசூலிக்கப்படும் தொகையானது ராஜகுடும்பத்து பொக்கிஷங்களை பராமரிக்க பயன்படுத்தப்பட உள்ளது.