பிரித்தானிய மகாராணியார் மரணமடைவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்ட விடயங்கள்
பிரித்தானிய மகாராணியார் மரணமடைவதற்கு முன் தங்களிடம் பகிர்ந்துகொண்ட விடயங்களை வெளியிட்டுள்ளார்கள் அவருக்கு நெருக்கமான சிலர்.
தனக்கு யார் மீதும் எந்த வருத்தமும் கிடையாது என்று கூறியிருக்கிறார் மகாராணியார்.
பிரித்தானிய மகாராணியார் மரணமடைவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் தங்களிடம் பகிர்ந்துகொண்ட விடயங்களை வெளியிட்டுள்ளார்கள் அவருக்கு நெருக்கமான சிலர்.
ஓய்வு பெற்ற பாதிரியாரான Rev Dr Iain Greenshields என்பவர், மகாராணியார் மரணமடைவதற்கு முந்தைய வார இறுதியில் பால்மோரல் மாளிகையில் மகாராணியாரை சந்தித்துள்ளார்.
மகாராணியாரின் அரசாட்சியின் அடிப்படை, அவரது கடவுள் நம்பிக்கைதான் என்று கூறியுள்ளார் அவர்.
அவர் ராணியாக பதவியேற்ற காலகட்டத்தில், நாட்டை ஆள ஞானம் வேண்டும் என கடவுளிடம் கேட்கப்போவதாக தெரிவித்திருந்தார் என்று கூறும் Greenshields, அது அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தது என்கிறார்.
image -thesun
தான் மகாராணியாரிடம் பெசிக்கொண்டிருந்தபோது, தனக்கு யார் மீதும் எந்த வருத்தமும் கிடையாது என அவர் கூறியதாக தெரிவிக்கும் Greenshields, அவரிடம் அதிகாரம் இருந்தது, ஆனால், அவர் அதை மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் தன் நாட்டுக்காக உழைப்பதில் காட்டினார், அதை அவர் நன்றாகவே செய்தார் என்கிறார்.
தான் மகாராணியாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் தனது வாழ்நாளின் கடைசி நாட்களில் இருக்கிறார் என்பதற்கான எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை என்று கூறும் Greenshields, அவர் மிகவும் ஆரோக்கியமாக, உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால், இப்போது திடீரென நம்மைப் பிரிந்துவிட்டார் என்கிறார்.
தன்னிடம் கடைசியாக மகாராணியார் ஜோக்கடித்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கும் Greenshields, மகாராணியாருக்கு 96 வயது. அவரைப் பார்த்தாலே அவரது உடல்நிலை தெரியும். ஆனால், அவர் பேச ஆரம்பித்துவிட்டால், மிகவும் வித்தியாசமாகிவிடுவார், அவ்வளவு நினைவாற்றல், தன்னிடம் பேசுபவரைக் குறித்த அத்தனை விடயங்களையும் தெளிவாக நினைவில் வைத்திருப்பார் என்கிறார்.
Picture: Andrew O'Brien.