கமீலாவின் முதல் திருமணத்துக்கு மகாராணியார் கொடுத்த பரிசு: கிடைத்த ஏமாற்றம்...
கமீலாவின் முதல் திருமணத்தின்போது அவருக்கு நாய்க்குட்டி ஒன்றைப் பரிசளித்தாராம் மகாராணியார்.
மகாராணியார் பரிசளித்த நாய்க்குட்டி ஒன்று தம்பதியர் விவாகரத்து செய்ததால் மகாராணியாரிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டதாம்.
இன்றைய பிரித்தானிய மன்னரின் மனைவியாகிய கமீலா, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
ஆம், கமீலா மற்றும் சார்லஸ் இருவருக்கிடையிலான உறவு குழப்பம் மிக்க ஒன்றாகவே திகழ்ந்தது. முதலில் இருவரும் பழகியிருக்கிறார்கள். ஆனால், கமீலா சார்லசை விட்டுவிட்டு ஆண்ட்ரூ பார்க்கர் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். சார்லஸ், டயானாவை திருமணம் செய்திருக்கிறார்.
இருவருக்கும் தனித்தனியே திருமணமானபின், மீண்டும் சார்லசுக்கும் கமீலாவுக்கும் காதல் முளைத்திருக்கிறது. அது இரகசியமாக தொடர, ஒருநாள் இரகசியம் வெளியாக, ராஜகுடும்பத்தில் பூகம்பம் வெடிக்க, தம்பதியர் பிரிய, டயானா உயிரிழக்க, மீண்டும் சார்லசும் கமீலாவும் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். வேடிக்கைதான்...
ஆனால், அந்த வேடிக்கைக் கதையில் டயானா என்னும் உயிர் பலியாகி, அந்த சோகம் அவரது பிள்ளைகள் மனதில் ஆறாக்காயமாக பதிந்துவிட்டதை மறுக்கமுடியாது.
சரி, இப்போது கமீலாவின் முதல் திருமணம் குறித்த விடயத்துக்கு வருவோம். கமீலா ஆண்ட்ரூவைத் திருமணம் செய்தபோது, தம்பதியருக்கு, தனது மனதுக்கு நெருக்கமான நாய்க்குட்டி ஒன்றைப் பரிசளித்தாராம் மகாராணியார். அந்த நாய்க்குட்டி ஆண்ட்ரூவுக்கு மிகவும் பிடித்துப்போனதாம்.
பின்னர், ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாய்க்குட்டியை பரிசளித்தாராம் மகாராணியார்.
ஆனால், 1995ஆம் ஆண்டு, ஆண்ட்ரூவும் கமீலாவும் பிரிந்துவிட்டார்கள்!
மோசமான விடயம் என்னவென்றால், அவர்கள் பிரிந்ததும், மகாராணியார் அவர்களுக்கு பரிசாக கொடுத்த இரண்டாவது நாய்க்குட்டி மகாராணியாரிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டதாம்.
தம்பதியராக இருந்தவர்களுக்குத் தான் பரிசாகக் கொடுத்த நாய்க்குட்டி, அவர்கள் பிரிந்ததால் திருப்பிக் கொடுக்கப்பட்ட விடயம் மகாராணியாரை சோகத்தில் ஆழ்த்திவிட்டதாம்!