95 வயதை கடந்தும் கடைசி வரை பிலிப்பிற்கு ஏன் மன்னர் பட்டம் கொடுக்கவில்லை தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்
இரண்டாம் எலிசபெத் பிரித்தானியாவின் மகாராணி என்று அழைக்கப்பட்ட போதும், அவருடைய கணவரான பிலிப் கடைசி ஏன் மன்னர் என்று அழைக்கப்படவில்லை என்பது குறித்த தகவல்களைப் பார்ப்போம்.
பிரித்தானியாவின் மகாராணியாரான இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் நேற்று உயிரிழந்தார்.
இதை மிகுந்த வேதனையுடன் மகாராணியார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் பிலிப்பை மகாராணியார் எந்தளவிற்கு காதலித்தார்?
இந்தளவிற்கு அவரை காதலித்தும் கடைசி வரை ஏன் பிலிப்பிற்கு மன்னர் என்ற பட்டம் கொடுக்கவில்லை என்பதைப் பார்ப்போம்.
பிலிப்-மகாராணியார் இரண்டாம் எலிசபெத் காதல்
இளவரசர் பிலிப்பை, மகாராணியாருக்கு தன்னுடைய 13 வயதில் இருந்தே தெரியும். இருவருக்கும் இடையே இருக்கும் இனம் புரியாத நட்பு, கடந்த 1942-ஆம் ஆண்டு மகாராணியாருக்கு 21 வயதாக இருக்கும் போது திருமணத்தில் முடிந்தது.
காதலர்களாக இருந்த போது இளவரசர் பிலிப்புக்கு ராணி எலிசபெத் பல கடிதங்களை எழுதியுள்லார். அதில் ஒரு கடிதம், சில ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 1.25 லட்சம் ரூபாய் வரைக்கும் ஏலம் போனது.
அந்தளவிற்கு அந்த கடிதம் ஏலம் போனதற்கு முக்கிய காரணம், அதில் மகாராணியார் பிலிப்புடன் நடந்த சந்திப்புகள், கேளிக்கை விருந்துகளில் பங்கேற்றது மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்கள் போன்றவை எல்லாம் குறிப்பிட்டிருந்தார்.
அதுவே அந்த கடிதம் இந்தளவிற்கு ஏலம் போக காரணமாக அமைந்தது. இப்படி பிலிப் மீது அளவற்ற காதல் கொண்ட மகாராணியாரால், அவரை மன்னராக ஆக்க முடியவில்லை.
பிலிப்பிற்கு மன்னர் பட்டம் ஏன் கொடுக்கவில்லை?
வருங்காலத்தில் இளவரசர் வில்லியம் மன்னர் ஆகலாம். அவரது மனைவி மனைவி கேட் மிடில்டன் மகாராணி என அழைக்கப்படலாம்.
ஆனால், பிலிப் மட்டும் மன்னர் ஆகாமல் இருந்ததற்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இருக்கும் சட்ட விதிமுறைகளே காரணம்.
இந்த சட்டத்தின்படி, அரச குடும்பத்தின் அடுத்த மன்னர் அல்லது ராணியாக யார் வரவேண்டும் என்பதை ரத்த உறவுதான் தீர்மானிக்குமே தவிர, பாலினம் அல்ல.
அதாவது, அரச குடும்பத்தினரின் வாழ்க்கைத் துணைவர்களைப் பொறுத்தவரை ஆணுக்கு ஒரு விதி, பெண்ணுக்கு ஒரு விதி என வகுக்கப்பட்டுள்ளது.
அரச குடும்ப ரத்த உறவு உள்ள ஒரு ஆண், எந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும், அவரது மனைவி, கணவர் இளவரசராக இருக்கும்போது இளவரசி என்றும், கணவர் மன்னர் ஆகி விட்டால், ராணி என்றும் அழைக்கப்படுவார்.
இதன் காரணமாகவே வரும் காலங்களில் வில்லியம் மன்னர் என அழைக்கப்படும்போது, அவரது மனைவி கேட் மிடில்டனும் ராணி என்றே அழைக்கப்படுவார்.
அதே சமயம், அரச குடும்ப ரத்த உறவு உள்ள ஒரு பெண், அரச குடும்பம் அல்லாத அல்லது அரச குடும்பத்தைத் துறந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அவரது கணவர், இளவரசர் என்றோ மன்னர் என்றோ அழைக்கப்படமாட்டார்.
அந்த அடிப்படையிலேயே பிலிப், எலிசபெத்தை 1947 ஆம் ஆண்டில் மணந்தபோது அவருக்கு இளவரசர் என்ற பட்டப் பெயர் வழங்கப்படவில்லை.
இருப்பினும் தனது அரச குடும்ப அதிகாரத்தைப் பயன்படுத்தி, 1957 ஆம் ஆண்டு, கணவர் பிலிப்புக்கு இளவரசர்' என்ற பட்டத்தை எலிசபெத் வழங்கினார்.
இதுவே பிலிப் கடைசி வரை மன்னர் என்று அழைக்கப்படாமல் போனதற்கு காரணம்.
இளவரசர் பிலிப், கிரேக்க மற்றும் டேனிஷ் அரச குடும்பத்தினருக்கு இளவரசனாகப் பிறந்தவர். எலிசபெத்தை திருமணம் செய்வதற்காக அரச குடும்பத்தை பிரிந்தார்.
அதற்கு பரிசாகவே, அவருக்கு எடின்பர்க் கோமகன் என்ற பட்டத்தை ராணி எலிசபெத் வழங்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.