இளம்பெண்ணை சீரழிக்க தூக்கிச் செல்லும் மர்ம நபர்: பரபரப்பை ஏற்படுத்திய காட்சி வெளியிடப்பட்டதன் பின்னணி
பிரித்தானியாவில், இளம்பெண் ஒருவரை வன்புணர்வதற்காக மர்ம நபர் ஒருவர் தூக்கிச் செல்லும் காட்சி ஒன்று பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பொதுவாக இப்படிப்பட்ட காட்சிகளை பொலிசார் வெளியிடுவதில்லை.
ஆனால், இந்த வழக்கில் அந்த மர்ம நபரை எப்படியாவது கண்டுபிடித்துவிடும் நோக்கில், அந்த வீடியோ வெளியிடப்பட்டது. நீள கோட்டும் மொட்டைத் தலையுமாக சினிமா வில்லன் போன்ற ஒருவர் ஒரு பெண்ணைத் தூக்கிச் செல்லும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. அவர் அந்தப் பெண்ணை தாக்கி நினைவிழக்கச் செய்து தூக்கிச் சென்றாரா என்பது தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வருந்தத்தக்க விடயம் என்னவென்றால், அந்த நபர் மேலும் ஒரு பெண்ணை சீரழித்தபிறகுதான் சிக்கினார்.
உண்மையில், அந்த நபர் அந்த பெண்ணை வன்புணர்ந்தது 2015ஆம் ஆண்டு. ஆனால், கடந்த ஆண்டு, வேறொரு பெண்ணை அவர் சீரழிக்க, அதைத் தொடர்ந்தே அவர் பொலிசாரிடம் சிக்கினார்.
அந்த நபரின் பெயர் Austin Osayande (40).
இப்போது ஏன் இந்த செய்தி வெளியாகியுள்ளது என்றால், முதல் குற்றம் நடந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
நேற்று, Austin, தான் ஒரு பெண்ணை வன்புணர்ந்ததாகவும், மற்றொரு பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கியதாகவும் Leeds Crown நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.