உக்ரைன் உருக்காலைக்குள் இருந்து ஒலிக்கும் அழகிய இளம்பெண்ணின் பாட்டுச் சத்தம்: வைரலாகியுள்ள ஒரு வீடியோ
எந்த நேரமும் கொல்லப்படலாம் என்னும் நிலைமையில் பொதுமக்களும் போராளிகளுமாக சுமார் 2,000 பேர் தங்கியிருக்கும் மரியூபோல் உருக்காலைக்குள் இருந்து ஒலிக்கும் அழகிய இளம்பெண் ஒருவரின் பாடல் அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அந்த அழகிய இளம்பெண்ணின் பெயர் Kateryna (21). இசை பயின்று விட்டு இராணுவத்தில் சேர்ந்துள்ள நைட்டிங்கேல் அவர்.
Azovstal உருக்காலைக்குக் கீழுள்ள பதுங்கு குழி ஒன்றிற்குள் தங்கியிருக்கும் அவர் நாட்டுப்பற்று தொடர்பான பாடல் ஒன்றைப் பாட, அவரது சக வீரர்களும் அவருடன் பின்னணியில் இணைந்து பாடுகிறார்கள்.
பாடல்களை எழுதி, மேடைக் கச்சேரிகளில் பாடியிருக்கும் Kateryna இசைத்துறையில் பட்டம் பெற்றாலும், அவரது மனமோ தன் நாட்டுக்காக போராடுவதிலேயே இருந்துள்ளது.
போருக்குப் போவதாகச் சொன்னால் பெற்றோர் அஞ்சுவார்கள் என்று எண்ணி, மருத்துவப் படிப்பு ஒன்றைத் தேர்வு செய்த Kateryna, மருத்துவமனை ஒன்றில் பணிபுரிவதாகக் கூறிச் சென்றாலும், பின்னர் தங்கள் மகள் போர்க்களத்தின் முன்னணியில் நின்று போராடுகிறாள் என்பதை அவரது பெற்றோர் கண்டுபிடித்துவிட்டார்கள்.
இந்த வீடியோ சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட, உக்ரைனில் அது வைரலாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் Katerynaவை இப்போது அவர் மறைந்திருக்கும் உருக்காலையின் நினைவாக Steel Bird என்றே அழைக்கிறார்களாம்!