பூதம் இருக்கு! மர்மக்குழியை ஆராய்ந்த நிபுணர்களுக்கு காத்திருந்த ஆச்சரியம்! சுவாரஸ்ய தகவல்
ஏமன் நாட்டில் உள்ள மர்மக்குழியை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்களுக்கு பல வியப்பூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
ஏமன் நாட்டில் அல்மாரா பாலைவனம் ஒன்று உள்ளது. அதில் பர்ஹட்டின் கிணறு என்று பெயர்பெற்ற மர்மக்குழி பல ஆண்டுகளாக உள்ளது. இந்த கிணறு 367 அடி ஆழமும் 30 மீட்டர் அகலமும் கொண்டது.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இதனை நகர கிணறு எனவும் இதில் பூதம் உள்ளதாக கூறுவார்கள். மேலும் அப்பகுதியை கடக்கும் போது துர்நாற்றம் வீச கூடுமாம். இதனால் அங்கு வாழும் மக்கள் இந்த குழி பக்கம் செல்வதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் எமன் நாட்டை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அக்குழியில் துணிச்சலுடன் இறங்கி ஆய்வு செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, இக்குழி நீண்டு காணப்படுவதுடன் இதில் அழகான நீர்வீழ்ச்சி இருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் பாம்புகள், குகை முத்துக்கள் போன்றவை காணப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பல ஆண்டுகளாக பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் அவர்கள் ஆய்வு செய்ததாக கூறினர்.
இந்த குகையில் எந்த ஒரு பூதமும் இல்லை. இது எமன் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிவுகள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளனர்.