தஜிகிஸ்தான் வங்கிகணக்குக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட பணம்! என்ன செய்வது என அறியாமல் தவிக்கும் தாலிபான் அமைப்பு
சில நாட்களுக்கு முன்பு தஜிகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் வங்கிக் கணக்கில் தலிபான்கள் தவறுதலாக கிட்டத்தட்ட $800,000 பணத்தை அனுப்பியதாக தஜகிஸ்தானில் உள்ள Avesta செய்தி இணையதளம் தெரிவித்திருந்தது.
என்ன செய்வது என அறியாமல் பணத்தை திரும்பி அனுப்புமாறு கூறி தற்போது தாலிபான் அமைப்பு தவித்து வருகிறது.
இருப்பினும், தலிபான்களை பயங்கரவாத அமைப்பாக தஜகிஸ்தான் கருதும் நிலையில், அரசு அதிகாரிகள், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறு ஏதும் இல்லை என மறுத்துள்ளனர்.
தஜிகிஸ்தானில் உள்ள அகதிக் குழந்தைகளுக்கான பள்ளிக்கு நிதியளிக்க இருந்தது என்றும், ஆனால் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு ஓடியதால் ஒப்பந்தம் முறிந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தாலிபான் ஆப்கானை கைப்பற்றிய சில வாரங்களுக்குப் பிறகு, பணப் பரிமாற்றம் செப்டம்பரில் நடந்ததாகவும், ஆனால் அதில் $400,000 என்ற அளவில் தான் பண பரிமாற்றம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.