காஸா மக்களுக்காக முதல் முறையாக அவசர உதவி கோரிக்கை வைத்த ஐ.நா
காஸா மற்றும் மேற்குக் கரையில் உள்ள சுமார் 2.7 மில்லியன் மக்களுக்கு உதவும் பொருட்டு 1.2 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக அவசர உதவி முறையீட்டை ஐநா முதல் முறையாக முன்வைத்துள்ளது.
பாலஸ்தீன மக்களின் தேவை
ஒட்டுமொத்த காஸா மக்களுக்கும் மேற்குக் கரையில் உள்ள 500,000 பாலஸ்தீன மக்களின் தேவையை பூர்த்தி செய்ய தற்போது அவசரமாக 1.2 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
@getty
அக்டோபர் 12ம் திகதி ஐ.நா முன்வைத்த கோரிக்கையில், 1.3 மில்லியன் மக்களுக்காக சுமார் 294 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக அவசர கோரிக்கை வைத்திருந்தது.
ஆனால் அதன் பின்னர், நிலை மிக மோசமடைந்துள்ளது என்பதையும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய கோரிக்கை என்பது, உணவு, தண்ணீர், சுகாதாரப் பாதுகாப்பு, தங்குமிடம், சுகாதாரம் மற்றும் காஸா பகுதியில் பாரிய குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிற அவசர முன்னுரிமைகளுக்கான தேவை என குறிப்பிட்டுள்ளது.
போர் நிறுத்த கோரிக்கை
மேலும் நன்கொடையாளர்கள் தங்கள் பங்களிப்பை உடனடியாக நிறைவேற்றவும் கேட்டுக்கொண்டுள்ளனர். ஹமாஸ் படைகள் திடீரென்று முன்னெடுத்த கொடூர தாக்குதலை அடுத்தே, இஸ்ரேல் காஸா பகுதி மீது கண்மூடித்தனமான தாக்குதலை தொடுத்து வருகிறது.
@getty
இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை மட்டும் 9,000 கடந்துள்ளது. உலக நாடுகள் பல போர் நிறுத்த கோரிக்கை முன்வைத்தும் , அமெரிக்காவும் இஸ்ரேலும் மறுப்பு தெரிவித்துள்ளதுடன்,
ஹமாஸ் படைகளை ஒழிப்பதாக கூறி, காஸா மக்களை கொன்று குவித்து வருகின்றனர் என்றே சமூக ஆர்வலர்கள் தரப்பு தெரிவிகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |