2022ம் ஆண்டிற்கான பெண்கள் உலக கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்!
2022ம் ஆண்டுக்கான பெண்கள் உலக கோப்பை போட்டி கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஒத்தி வைக்கப்படலாம் என கருதப்பட்ட நிலையில், போட்டி அட்டவணை மற்றும் போட்டி நடைபெறும் இடம் என எதிலும் மற்றும் இருக்காது என ஐ.சி.சியின் பெண்கள் கிரிக்கெட் பிரிவின் நிர்வாக தலைவர் Andrea Nelson தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸான ஓமிக்ரோன் பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பெண்கள் கிரிக்கெட் பிரிவின் நிர்வாக தலைவர் Andrea Nelson, நியூஸிலாந்தில் 2022ம் நடைபெற இருக்கும் பெண்கள் உலக கோப்பை போட்டியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டே நடைபெற்று இருக்க வேண்டிய இந்த போட்டிகள் கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, 2022ம் ஆண்டு போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் இந்த ஆண்டு திட்டமிட்டபடி அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
மேலும் போட்டிகள் அறிவிக்கப்பட்ட Tauranga, Dunedin, Hamilton, Wellington, Auckland மற்றும் Christchurch ஆகிய ஆறு இடங்களில் திட்டமிட்டப்படி போட்டிகளை நடத்தவும்.
வீரர்களின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கையில் தற்போது முனைப்பு காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்து அறிவித்தது இருந்ததை தொடர்ந்து, ஐ.சி.சியின் பெண்கள் கிரிக்கெட் பிரிவின் நிர்வாக தலைவர் Andrea Nelson செய்தியாளர்களை சந்தித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.