இப்போதைக்கு அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை: ஜேர்மன் சேன்ஸலர்
ரஷ்யாவால் இப்போதைக்கு அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ்.
அணு ஆயுத தாக்குதலுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது
இன்று வெளியான ஊடகவியலாளர்கள் சந்திப்பு தொடர்பான அறிக்கையில், சர்வதேச அழுத்தம் காரணமாக, மாஸ்கோ உக்ரைன் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தும் அபாயம் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார் ஷோல்ஸ்.
அணு ஆயுத அபாயம் நீங்கிவிட்டதா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, இப்போதைக்கு நாம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் என்றார் ஷோல்ஸ்.
இப்போதைக்கு ஒரு விடயம் மாறியுள்ளது: அணு ஆயுதம் பயன்படுத்துவதாக மிரட்டுவதை ரஷ்யா நிறுத்தியுள்ளது. சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் பலனாக அது நடந்துள்ளது என்று கூறியுள்ளார் அவர்.