தோனி இனி சென்னைக்காக ஆடுவாரா மாட்டாரா? CSK அணி உரிமையாளர் அளித்த பதில்
எதிர்வரும் காலங்களில் தோனி சென்னை அணியில் இருப்பாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் நெத்தியடி பதிலளித்துள்ளார்.
2021 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்ற நாள் முதல், அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி சென்னை அணியில் இருப்பாரா என்ற கேள்வி தொடர்ந்து நிலவி வருகிறது.
சமீபத்தில் சிஎஸ்கே அதிகாரி ஒருவர், ஏலத்தில் சென்னை அணி அதன் முதல் தக்கவைப்பு அட்டையை தோனிக்கு பயன்படுத்தம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐபிஎல் கோப்பையுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட் (ஐசிஎல்) துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனரும், சிஎஸ்கே உரிமையாளருமான சீனிவாசனிடம், தோனியின் எதிர்காலம் குறித்து கேள்விகேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீனிவாசன், தோனி சிஎஸ்கே, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் ஒரு பகுதி.
தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை, சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை என திட்டவட்டமாக கூறினார்.
அடுத்த ஐபிஎல் ஏலத்தில் தோனியையும் மற்ற சிஎஸ்கே வீரர்களையும் தக்கவைப்பது பற்றி கேட்டதற்கு, தக்கவைத்தல் கொள்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை என சீனிவாசன் பதிலளித்தார்.