சீரகத்தை அதிகமாக சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் எல்லாம் வருமாம்... கவனமா இருங்க
Cumin
side effects
Health info
By Balakumar
சீரகம், நம் உணவில் அதிகம் சேர்க்கப்படும் பொருள் ஆகும். இதில் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
இருப்பினும் நமது உணவில் எந்த வகையான பொருளாக இருந்தாலும் அதனை சரியான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இல்லையொன்றால் இது பல பக்கவிளைவுகளை நமது உடலுக்கு ஏற்படுத்தி விடுகின்றது.
அந்தவகையில் சீரகத்தை அதிகமாக எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- சீரக விதைகளை அதிகமாக எடுத்து கொள்ளும்போது செரிமான பிரச்சினைகளுக்கு காரணமாகவும் அமைந்து விடுகின்றன. அதுமட்டுமல்லாது, இரைப்பை பகுதியில் அதிக வாயு வெளியேற்றத்திற்கு காரணமாகி, நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.
- சீரக விதைகளில் உள்ள அதிகப்படியான கார்மினேட்டிவ் விளைவு, ஏப்பங்களை அதிகளவில் ஏற்படுத்த காரணமாக அமைகின்றன.
- சீரக விதைகளை நாம் அதிகளவில் நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள எளிதில் ஆவியாகும் தன்மை கொண்ட எண்ணெய், நமது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
- பெண்கள், தங்கள் கர்ப்ப காலத்தில் சீரகத்தை அதிகம் பயன்படுத்தி வந்தால், அது கருச்சிதைவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. கர்ப்பிணிகள், தங்களது உணவில் குறைந்த அளவிலேயே சீரகத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- சீரக விதைகளை அதிகம் நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில், மனப்பிறழ்வு, மயக்கம் மற்றும் குமட்டல் உணர்வுகள் ஏற்படும். சீரகத்தை நம் .ணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால், அது மயக்கம் மற்றும் குமட்டலை ஏற்படுத்தி விடும்.
- சீரகத்தை நம் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலத்தின் போது அதிர உதிரப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
- சீரகத்தை, அதிகளவில் நமது உணவில் சேர்த்துக் கொண்டால், நமது உடலில் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
- நமது உணவில் சீரகம் அதிகரிக்கும் பட்சத்தில், அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென்று பாதியாக குறைத்துவிடும். இத்தகைய நீரிழிவு குறைபாடு கொண்டவர்கள், தங்களது உணவில் சீரகத்தை சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள், கட்டாயம் தங்கள் உணவில் அதிகம் சீரகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவர்களது உணவில் சீரகம் இருந்தால், அது பால் சுரப்பை பெருமளவில் குறைத்து விடும். அதற்காக, அவர்கள் தங்களது உணவில் இருந்து சீரகத்தை முற்றிலும் தவிர்த்துவிடக் கூடாது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US