ஆப்கானில் ஐஎஸ்-தாலிபான் இடையே வெடித்தது மோதல்! கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் கிடந்த சடலங்கள்
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ஸ்ட் 31ம் திகதியோடு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறிய நாள் முதல் Nangarhar மாகாணத்தில் தலிபான்களை குறிவைத்து ஐஎஸ்-கே தொடர் தாக்தலை நடத்தி வருகிறார்கள்.
Nangarhar மாகாணம் பல ஆண்டுகளாக ஐஎஸ்-கே கோட்டையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Nangarhar மாகாணத்தில் தலிபான்-ஐஎஸ்-கே இடையே மோதல் வெடித்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை காலை Nangarhar மாகாணத்தின் Behsud மாவட்டத்தில் ஐந்து பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று காலை Nangarhar மாகாண தலைநகர் ஜலாலாபாத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் 3 ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
3 பேரின் கை மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 3 பேரும் நேற்று இரவு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
3 உடல்களும் பிரேத பரிசோதனைக்காக Nangarhar மாகாணத்தில் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களின் அடையாளம் குறித்த விவரம் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.