இனி இவர்கள் மூத்த ராஜகுடும்ப உறுப்பினர்கள் கிடையாது: மன்னர் சார்லசின் திட்டம்
மக்களுடைய வரிப்பணம் வீணாகக்கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர மன்னர் சார்லஸ் திட்டம்.
இனி ஏழுபேர் மட்டுமே ராஜகுடும்பப் பணிகளை மேற்கொள்ளும் ராஜகுடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களுடைய வரிப்பணம் வீணாகக்கூடாது என்பதற்காக ராஜகுடும்பத்தினர் மீதே கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மன்னர் சார்லஸ் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மகாராணியார் உயிருடன் இருக்கும்போதே, கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, உழைக்கும் ராஜகுடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை, அதாவது மூத்த ராஜகுடும்ப உறுப்பினர்கள் அல்லது senior royal team ஒன்றைக் குறித்த திட்டம் ஒன்றை வெளியிட்டாராம்.
Image: 2022 Max Mumby/Indigo
அதில், எட்டு ராஜகுடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே இடம். அவர்கள் யார் யாரென்றால், மகாராணியார், இளவரசர் சார்லஸ், கமீலா, இளவரசி ஆன், இளவரசர் வில்லியம், இளவரசி கேத்தரின், இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சோபி ஆகியோர்.
இந்நிலையில், மகாராணியார் மறைந்துவிட்டதால், அவர் தவிர்த்து, இனி மற்ற ஏழு பேர் மட்டுமே ராஜகுடும்பப் பணிகளை மேற்கொள்ளும் ராஜகுடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்டிமெண்ட் பார்க்கும் மகாராணியார் இப்படி ராஜகுடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்க ரொம்பவே யோசித்திருக்கிறார். ஆனால், சார்லஸ் மன்னரானதும் அதை நிறைவேற்ற முடிவு செய்துவிட்டார்.
ஆக, இனி மூத்த ராஜகுடும்ப உறுப்பினர்கள் என்ற பட்டியலில், இளவரசர் ஹரி, அவரது மனைவியாகிய மேகன், இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோர் இடம்பெறமாட்டார்கள்.
ஏற்கனவே, ஆண்ட்ரூவின் மகளான யூஜீனி, இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்வதற்காக, மக்கள் வரிப்பணத்தில் 100,000 பவுண்டுகளை செலவிட்ட விடயம் குறித்து அறிந்த சார்லஸ், இனி இளவரசி யூஜீனிக்கோ, அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிவிட்டாராம்.
Photo by Hugo Burnand-Pool/Getty Images
ஆக, இளவரசர் ஹரி, அவரது மனைவியாகிய மேகன், இளவரசர் ஆண்ட்ரூ மட்டுமல்ல, ஆண்ட்ரூவின் பிள்ளைகளான இளவரசி யூஜீனி மற்றும் அவரது சகோதரி பீட்ரைஸ் ஆகியோரும் இனி உழைக்கும் மூத்த ராஜகுடும்ப உறுப்பினர்கள் என்ற பட்டியலில் வர வாய்ப்பிலாமல் போகலாம்.
மக்களுடைய வரிப்பணம் இப்படியெல்லாம் செலவிடப்படக்கூடாது என்று எண்ணும் மன்னர் சார்லஸ் இப்படியொரு அதிரடி நடவடிக்கையை எடுக்கக்கூடும் என தான் கருதுவதாக தெரிவிக்கிறார் ராஜகுடும்ப எழுத்தாளரான Angela Levin.