விராட் கோலி பதவி விலக காத்திருந்த ரோகித் சர்மா: முன்னாள் கேப்டன் குற்றச்சாட்டு
விராட் கோஹ்லியின் பதவி விலகலுக்காக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் காத்திருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்திப் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர், விராட் கோஹ்லி ஒரு சர்வதேச நட்சத்திரம். அவர் பதவி விலகிவிட்டார். இதையடுத்து இந்தியாவின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி வருகிறது.
ரோகித் சர்மா கேப்டனாக இருப்பதற்கு உடல் தகுதி இல்லாதவர். முழு தென் ஆப்ரிக்கா தொடரிலும் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை.
கே.எல்.ராகுலுக்கு அந்த திறமை கிடையாது. கோஹ்லி பதவி விலகுவதாக அறிவித்தவுடன், அனைத்து வீரர்களுடைய எதிர்வினைகளையும் பார்த்தேன்.
ராகுல், ரோகித் சர்மா ஆகிய இருவரும் கோஹ்லி விலகுவதற்காக காத்திருந்தது போல தெரிகிறது. விராட் கோஹ்லியை விட பெரிய வீரர் உலகத்தில் கிடையாது.
அவர் மீண்டும் ரன்கள் அடிக்க தொடங்கும்போது அவரை சீண்டியவர்களுக்கு பதிலடியாக அமையும் என ரஷித் லத்திப் தெரிவித்துள்ளார்.