அதை எங்களிடம் கொடு! லண்டன் இரயில் நிலையத்தில் பட்டப்பகலில் நடந்த சம்பவம்... சிசிடிவி புகைப்படங்களுடன் முக்கிய தகவல்
லண்டன் இரயிலில் மூன்று பேரிடம் செல்போனை திருட முயன்ற மர்ம நபர்கள் தொடர்பான முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
லண்டனின் ஆக்ஸ்போர்ட் சர்கஸ் இரயில் நிலையத்தில் தான் இந்த சம்பவம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி பகல் 2 மணிக்கு நடந்துள்ளது.
இரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணி அருகில் சென்ற 2 மர்ம நபர்கள் அவரிடம், உன்னுடைய செல்போனை எங்களிடம் கொடு என கேட்டதோடு அதை அவரிடம் இருந்து பறிக்க முயன்றனர்.
ஆனால் அந்த பயணி அங்கிருந்து சாதுர்யமாக தப்பியோடியுள்ளார்.
பின்னர் இரயிலுக்குள் ஏறிய அந்த இருவரும் உள்ளே உட்கார்ந்திருந்த இரண்டு பயணிகளை மிரட்டி செல்போன் கேட்டதோடு, அவர்களை அடித்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் குறித்த சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவர்களிடம் இது தொடர்பில் விசாரிக்க வேண்டும் என கூறியுள்ள பொலிசார் பொதுமக்களுக்கு எதாவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.
