பெண் அமைச்சரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை: திகிலை ஏற்படுத்திய சம்பவம்
தென்னாப்பிரிக்காவின் போக்குவரத்துத்துறை அமைச்சரின் நெற்றியிலேயே துப்பாக்கியை வைத்து கொள்ளையர்கள் முக்கியமான சில பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
திடீரென பஞ்சரான கார் டயர்
தென்னாப்பிரிக்காவின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருப்பவர் Sindisiwe Chikunga. அவர் திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது கார் டயர் வெடித்துள்ளது.
அவரது பாதுகாவலர்கள் காரிலிருந்து இறங்க, திடீரென துப்பாக்கிகளுடன் காரை சூழ்ந்த முகமூடிக் கோள்ளையர்கள் சிலர், பாதுகாவலர்களை தரையில் படுக்குமாறு உத்தரவிட்டுவிட்டு, அமைச்சரின் கார் கதவைத் திறந்துள்ளனர்.
அமைச்சரை காரிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட கொள்ளையர்கள், அவரிடம் கையிலிருக்கும் பணத்தைக் கொடுக்குமாறு வற்புறுத்த, அவர், தான் கையில் பணம் கொண்டுவரவில்லை என்று கூற, காரிலிருந்த அவரது லாப்டாப்கள், மொபைல்கள் மற்றும் பாதுகாவலர்களின் துப்பாக்கிகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளார்கள்.
திகிலை ஏற்படுத்தியதாக கூறும் அமைச்சர்
நல்லவேளையாக தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கூறும் Sindisiwe Chikunga, ஆனாலும் அந்த சம்பவம் தனக்கு திகிலை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அந்த கொள்ளையர்கள் சாலையில் கூர்மையான பொருட்களைப் போட்டு கார் டயரை வெடிக்கச் செய்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
Twitter
அமைச்சரை பாதுகாக்கத் தவறிய பாதுகாவலர்கள் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து பின்னர் முடிவு செய்யப்பட உள்ளது.
அமைச்சர் நெற்றியிலேயே துப்பாக்கியை வைத்துக் கொள்ளையடித்த கொள்ளையர்களை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
தென்னாப்பிரிக்காவில் ஆயுத புழக்கம் சர்வசாதாரணம். ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வு ஒன்றில், ஆண்டொன்றிற்கு, சுமார் 1.3 மில்லியன் மக்கள் கொள்ளைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |