துரோகத்தின் உச்சம் இது: இந்திய அரசைச் சாடும் காமல்
துரோகத்தின் உச்சகட்டம் இது என்று ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கை மீதான வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலை குறித்து மத்திய அரசை மநீம தலைவர் கமல் கடுமையாக விமர்சித்துள்ளார்
இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு.
ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது.
— Kamal Haasan (@ikamalhaasan) March 25, 2021
தமிழுக்கும் தமிழர்க்கும் மத்திய அரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.