ஜேர்மனியில் உடனடியாக இதை செய்தாக வேண்டும்! சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் மூன்றாவது அலையை தடுக்க ஜேர்மனி முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டும் என்று நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்தார்.
பெர்லினில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், ஜேர்மனிக்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு தேவை என கூறினார்
மேலும், சமூக தொடர்புகளை குறைக்க இரவுநேர ஊரடங்கு தேவைப்படலாம் என்று குறிப்பிட்டார். ஜேர்மனியில் தற்போது 4,500 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர், இந்த நிலை தொடர்ந்தால் சுகாதார அமைப்புக்கு நெருக்கடி அதிகமாகும் என்று அவர் கூறினார்.
ஈஸ்டர் பண்டிகையின்போது குறைவான தொற்றுநோய்கள் பதிவானதாக வெளியான தகவல்கள் நம்பகமானதாக இல்லை என்றும் ஸ்பான் கூறினார்.
விடுமுறை நாட்களில் குறைவான நபர்கள் மருத்துவரிடம் சென்றதாக குறிப்பிட்ட சுகாதார அதிகாரிகள், இதன் காரணமாக ஜேர்மனியில் தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்ற தவறான கருத்து பரவியதாக கூறினர்.