காஸாவில் உதவி மையங்களுக்குள் உணவு தேடி புகுந்த ஆயிரக்கணக்கானோர்
போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் உள்ள அதன் உணவுக் கிடங்குகளை ஆயிரக்கணக்கான மக்கள் சூறையாடியதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கவலைக்குரிய அறிகுறி இது
மக்களின் இயல்பு வாழ்க்கை சின்னா பின்னமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா, கோதுமை, மாவு மற்றும் இதர பொருட்கள் பல கிடங்குகளில் கொள்ளையடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மூன்று வார யுத்தம் மற்றும் இறுக்கமான முற்றுகைக்குப் பிறகு சிவில் ஒழுங்கு சீர்குலையத் தொடங்கும் கவலைக்குரிய அறிகுறி இது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சூறையாடப்பட்ட டெய்ர் அல்-பாலாவில் உள்ள கிடங்குகளில் ஒன்று, அக்டோபர் 21 அன்று எகிப்தில் இருந்து காசாவைக் கடக்கத் தொடங்கிய மனிதாபிமான கான்வாய்களில் இருந்து பொருட்களை சேமிக்க பயன்படுத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
காசா பகுதியின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள பல UNRWA கிடங்குகள் மற்றும் விநியோக மையங்களுக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் நுழைந்து, கோதுமை மாவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் போன்ற பிற அடிப்படை உயிர்வாழும் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
வெறும் 84 லொறிகள் மட்டுமே
அக்டோபர் 7ல் ஹமாஸ் படைகள் காசா எல்லையில் இருந்து இஸ்ரேலில் வெறித்தனமாக தாக்குதலை முன்னெடுத்த நிலையில் 1,400 பேர் கொல்லப்பட்டதுடன், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்ப்ட 230 பேர்களை பணயக்கைதியாகவும் பிடித்தனர்.
இதற்கு பழிவாங்கும் வகையில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில், இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 8,000 கடந்துள்ளது.
அத்துடன் காஸா பகுதிக்கான உணவு விநியோகத்தை இஸ்ரேல் மொத்தமாக முடக்கியது. போர் தொடங்கும் முன்னர் நாளுக்கு 500 லொறிகள் உணவு மற்றும் இதர பொருட்கள் காஸா பகுதிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த 3 வாரங்களில் வெறும் 84 லொறிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐ..நா குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |