கொரோனா ஊரடங்கில் விதிக்கப்பட்ட அபராதம்... ஆயிரக்கணக்கானோருக்கு திருப்பி அளிக்கும் ஐரோப்பிய நாடு
ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கொரோனா ஊரடங்கு அமுலில் இருந்த 2 ஆண்டுகளில் விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகையும் மக்களுக்கு திருப்பி அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அபராத தொகை திருப்பி வழங்க
கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் Robert Golob தலைமையிலான கட்சி தங்களது தேர்தல் வாக்குறுதியாக இதை முன்வைத்திருந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு அபராத தொகை திருப்பி வழங்கப்பட உள்ளது.
Credit: Social Media
ஸ்லோவேனியாவில் முதல் கொரோனா ஊரடங்கின் போது தேவாலயம் ஒன்றின் படியில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்ட ஒருவருக்கு 400 யூரோ அபராதமாக விதிக்கப்பட்டது. குறித்த நபரின் புகைப்படம் அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட, அந்த நபர் குறுகிய நாட்களில் பிரபலமானார்.
மட்டுமின்றி, அந்த சம்பவம் ஸ்லோவேனியா அரசாங்கத்தின் கடும்போக்கு நடவடிக்கையின் எடுத்துக்காட்டாகவும் அடையாளப்படுத்தப்பட்டது. தற்போது அந்த நபர் தமக்கு விதிக்கப்பட்ட 400 யூரோ அபராதத்தை திரும்ப பெற இருக்கிறார்.
இவருடன், மேலும் 60,000 ஸ்லோவேனியா மக்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்ப பெற இருக்கிறார்கள். ஸ்லோவேனியாவில் கொரோனா ஊரடங்கு அமுலில் இருந்த சுமார் இரண்டாண்டு காலம் பொலிசார் மொத்தமாக 6 மில்லியன் யூரோ வரையில் அபராதமாக வசூலித்துள்ளனர்.
கடும்போக்கு நடவடிக்கை
அந்த மொத்த தொகையும் உரியவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட இருப்பதுடன், வழக்குகளும் கைவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் Janez Janša தலைமையிலான வலதுசாரி அரசாங்கம் கொரோனா காலகட்டத்தில் கடும்போக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
@ians
ஸ்லோவேனியா மக்கள் தங்கள் உள்ளூர் பகுதியில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டதுடன், இரவு நேர ஊரடங்கும் அமுலில் கொண்டுவரப்பட்டது. பொதுவெளியில் மட்டுமின்றி, வீட்டின் உள்ளேயும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது.
ஆனால் அப்போது வசூலிக்கப்பட்ட அபராதம் தற்போது திருப்பி அளிக்கப்படுவதாக வெளியான அறிவிப்பை அடுத்து, முன்னாள் பிரதமர் Janez Janša கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நமது சக குடிமக்களின் உயிருக்காக அயராது போராடிய அனைத்து சுகாதார ஊழியர்களின் முகத்திலும் காறி உமிழும் செயல் இதுவென அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |