ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவார்கள்... ட்ரம்பின் முடிவுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த எம்.பி
உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நிறுத்தியுள்ள டொனால்டு ட்ரம்பின் முடிவால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவார்கள் என அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
பேரழிவை ஏற்படுத்தும்
வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த கருத்து மோதல்களுக்கு ஜனாதிபதி ட்ரம்பிடம் ஜெலென்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் Oleksiy Goncharenko கெஞ்சியுள்ளார்.
ட்ரம்பின் இந்த முடிவானது பேரழிவை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள அவர், இந்த நெருக்கடியில் இருந்து வெளியேற இயன்றதனைத்தையும் ஜெலென்ஸ்கி முன்னெடுக்க வேண்டும் என்றும் Oleksiy Goncharenko தெரிவித்துள்ளார்.
ஆனால் வெள்ளிக்கிழமை தொடங்கி ஜனாதிபதி ட்ரம்ப் ஜெலென்ஸ்கியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். அமெரிக்க ஆதரவை அவர் நன்றியுணர்வுடன் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்றும், மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க இன்னமும் வாய்ப்பிருப்பதாகவே ட்ரம்ப் சூசகமாக தெரிவித்து வருகிறார்.
உக்ரைனில் இருந்து 500 பில்லியன் டொலர் மதிப்பிலான கனிம வளங்களை குறிவைத்துள்ள ட்ரம்ப், அந்த ஒப்பந்தம் செயலுக்கு வராததாலையே கடும் கோபத்தில் காணப்படுகிறார்.
ஆதரவு தேவைப்படும்
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் பாதுகாப்பை உறுதி செய்ய ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ள கோரிக்கைகளை ட்ரம்ப் ஏற்க மறுத்த காரணத்தால் அந்த ஒப்பந்தம் அமையாமல் போனது.
இதனையடுத்தே வெள்ளை மாளிகையில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என ஜெலென்ஸ்கியை ட்ரம்ப் மிரட்டினார். ஆனால் திங்களன்ரூ பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவிக்கையில், கனிம வள ஒப்பந்தமானது உக்ரைனுக்கு ஒரு பாதுகாப்பு உத்தரவாதமாக மட்டும் போதுமானதாக இல்லை என்றார்.
உக்ரைனில் அமைதிப்படையாக ஐரோப்பிய இராணுவம் களமிறங்கினாலும் அமெரிக்காவின் ஆதரவு தேவைப்படும் என்றார் ஸ்டார்மர். ஓவல் அலுவலக கருத்து மோதலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தற்போது ஒரு ஒப்பந்தத்தை முன்னெடுக்க கடுமையாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |