ராணியாரை கொல்ல விண்ட்சர் மாளிகையில் அத்துமீறிய இளைஞர்: அவர் குறித்து வெளியான புதிய தகவல்
இந்திய வம்சாவளி இளைஞர் வில் அம்புடன் திட்டமிட்டே விண்ட்சர் மாளிகையில் அத்துமீறியுள்ளார்.
நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சி
காலமான பிரித்தானிய ராணியாரை கொல்ல வில் அம்புடன் விண்ட்சர் மாளிகையில் அத்துமீறி நுழைந்த இந்திய வம்சாவளி இளைஞர் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 வயதேயான ஜஸ்வந்த் சிங் சைல் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் வில் அம்புடன் திட்டமிட்டே விண்ட்சர் மாளிகையில் அத்துமீறியுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது தேச துரோகம் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ராணியாரை கொல்லும் நோக்கில் ஆயுதம் ஏந்தியதாகவும், அல்லது அவரது உயிரை பறிக்கும் நோக்கில் ஆயுதத்தால் குறிவைத்ததாகவும் முதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021 டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் நாளில் குறித்த நபர் ஆயுதத்துடன் ராணியாருக்கு மிக அருகே நெருங்கியுள்ளார். இது அவரை கொல்ல முன்னெடுக்கப்பட்ட நகர்வு எனவும் அல்லது நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சி எனவும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@Shutterstock
மேலும், ராணியார் மட்டுமின்றி காஷ்மீர் சைல் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலரையும் ஒரே நாளில் கொல்ல முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, பொதுவெளியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள ஆயுதத்தை அவர் ஏந்தியிருந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பல்பொருள் அங்காடி ஊழியரான ஜஸ்வந்த் சிங் சைல் கைதான பின்னர் தமது பெயர் மற்றும் பிறந்த திகதியை பொலிசாரிடம் உறுதி செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 20 திகதி முதல் 2 அல்லது மூன்று வாரங்களுக்கு விசாரணை முன்னெடுக்க நீதிபதி Sweeney முடிவு செய்துள்ளார். அதுவரையிலும், விசாரணைக் கைதியாக ஜஸ்வந்த் சிங் சைல் காவலில் வைக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது.
@getty