பிரான்ஸில் பயங்கரவாத சதித்திட்டம் தொடர்பில் மூவர் கைது! அமெரிக்க-ஈரான் போருடன் தொடர்பா?
அமெரிக்க-ஈரான் போருடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பிரான்ஸின் பாரிஸ் நகரில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு எச்சரிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் Bank of America தலைமை அலுவலகத்திற்கு அருகே, ஒருவர் கையால் செய்யப்பட்ட ஒரு எரியூட்டும் கருவியை வைக்க முயன்றதாகக் கூறப்பட்டபோது பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முதன்மை சந்தேக நபரை அவர்கள் தங்களது காவலில் எடுத்தனர்.
அதேசமயம், இச்சம்பவத்தை தனது அலைபேசியில் படம்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இரண்டாவது நபர், காவல்துறையினர் அவரைப் பிடிப்பதற்கு முன்பே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சந்தேக நபர்கள்
பாரிஸின் மதிப்புமிக்க 8வது வட்டாரத்தில் உலகப் புகழ்பெற்ற சாம்ப்ஸ்-எலிசீஸ் பகுதியில் இருந்து மிகக் குறுகிய தூரத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக, பிரான்ஸின் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
அதிகாரிகள் கூறும்போது, முதல் சந்தேக நபர் ஒரு சிறார் என்றும், பிரான்ஸின் கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் அவரது காவல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து காவல்துறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |