ஆமையால் பெற்றோர் கண் எதிரே குழந்தைகளுக்கு ஏற்பட்ட சோகம்.. பிரபல நாட்டில் அதிர்ச்சி சம்பவம்!
தான்சானியா நாட்டில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்ட மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தான்சானியா நாட்டில் பெம்பா என்ற தீவு பகுதியைச் சேர்ந்த சிலர் ஆமைக்கறியை உணவாக சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதோடு 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் அந்த கடல் ஆமைக்கறியில் விஷம் ஏதாவது இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையை அடுத்து பொலிசார் பரிசோதனைக்காக ஆமைக்கறியின் மாதிரிகளை சேகரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த காலங்களில் பெம்பா தீவு பகுதியில் ஆமைக்கறியை உணவாக உண்டு பலர் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.