மூன்று தலைமுறை... காஸாவில் ஒரே குடும்பத்தில் 35 பேர்களை மொத்தமாக காவு வாங்கிய இஸ்ரேல்
காஸாவில் செவ்வாயன்று நடத்தப்பட்ட இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையை சேர்ந்த 35 பேர்கள் மொத்தமாக கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
35 பேர்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக
காஸா பகுதியில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருபவர் முகமது ஹம்தான். இவரது குடும்ப உறுப்பினர்கள் 35 பேர்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக கொல்லப்பட்டுள்ளனர்.
@reuters
50 வயதான முகமது ஹம்தானை நொறுங்கிப்போன அவரது வீட்டின் இடிபாடுகளில் இருந்து சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டுள்ளனர். அதன் பின்னர் அவருக்கு தெரிய வந்தது, இஸ்ரேல் குண்டுவீச்சில் தமது மகள், சகோதரர், மருமகள், உறவினர்கள் என மொத்த பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று.
செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் தொழுகைக்கு பின்னர் சகோதரர்களுடன் நாட்டு நடப்பு பற்றி பேசிக்கொண்டிருந்துள்ளார் முகமது ஹம்தான். இந்த நிலையில் திடீரென்று குண்டு வெடிக்கவும், அனைவரும் கட்டிட இடிபாடுகளுக்கு சிக்கிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
@reuters
இஸ்ரேல் குண்டு வீச்சு
10,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற இஸ்ரேலின் வான் மற்றும் பீரங்கி குண்டு தாக்குதல் காரணமாக காஸாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பலரில் ஹம்தான் குடும்பமும் ஒன்றாகும்.
ஹம்தானைப் பொறுத்தவரை, போர் அவரது குடும்பத்தை மொத்தமாக சிதைத்துள்ளது என்றே நம்புகிறார். இங்கேயே பிறந்து வளர்ந்தோம், இறுதியில் இப்படியான ஒரு சூழலில் மொத்தமும் கைவிட்டு போய்விடும் என கனவில் நினைக்கவில்லை என்றார்.
@reuters
மூன்று தலைமுறையை சேர்ந்த மொத்தம் 35 பேர்களை ஒரே நேரத்தில் இழந்துள்ளதாக அவர் கதறியுள்ளார்.
இஸ்ரேல் அத்துமீறல்களுக்கு பயந்து 1948ல் ஹம்தான் குடும்பம் உட்பட பாலஸ்தீனியர்களாக கான் யூனிஸ் பகுதியில் அகதிகள் முகாம் ஒன்று நிறுவப்பட்டது. தற்போது அந்த முகாம் மீதே இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |