ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு அடித்த அதிர்ஷ்டம்! அமெரிக்காவில் சுவாரசிய சம்பவம்
ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்ளாமல் ஒரே குடும்பத்தில் 3 பேர் ஒரே எண்ணில் லொட்டேரி சீட்டை வாங்கியுள்ளனர்.
வெற்றி பெற்ற மூவருக்கும் ரூ.41 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஒரே நேரத்திலும் நாளிலும் எதிர்பாராத பம்பர் லொட்டரியை வென்றுள்ளனர்.
லொட்டரி விளையாட்டு முழுக்க முழுக்க அதிர்ஷ்டம் சார்ந்தது. ஒரு சிலரே அந்த அதிர்ஷ்டத்தை பெறுகிறார்கள், மற்றவர்கள் பல ஆண்டுகளாக லொட்டரி சீட்டுகளை வாங்கினாலும், ரொக்கப் பரிசுகளை வெல்வதில்லை.
ஆனால், அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது போன்று அதிர்ஷ்டம் யாருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
மேரிலாந்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், மேரிலாண்ட் லொட்டரியில் அதிர்ஷ்டக் குலுக்கல்களில் வெற்றி பெற்றுள்ளனர், இது மிகவும் வினோதமானது, நம்புவது கடினம். ஒரே டிராவில் வெற்றி பெற்ற மூவருக்கும் தலா ரூ.41 லட்சம் (இந்திய ரூபாய்) ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
மேரிலேண்ட் லொட்டரியின்படி,அக்டோபர் 13 அன்று 61 வயது தந்தை ஹாம்ப்ஸ்டெட்டில் ரூ.82 டிக்கெட்டை வாங்கினார். அதன் பிறகு, அவரது 31 வயது மகன் மற்றும் 28 வயது மகள் இருவரும் ஒரே குலுக்கல்லுக்கு ஒரே கடையில் டிக்கெட் வாங்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மற்ற இருவரும் டிக்கெட் வாங்கியிருப்பது தெரியாது.
இன்னும் சுவாரசியமாக, குடும்பத்தின் மூன்று உறுப்பினர்களும் ஒரே மாதிரியான எண்களைப் பயன்படுத்தினர். அது வெற்றி எண்ணாக மாறியது.
லொட்டரி அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர்கள் அனைவரும் ரொக்கப் பரிசுகளை வென்றதை உணர்ந்தபோது, அவர்களது அதிர்ஷ்டத்தை குடும்பத்தினரால் நம்ப முடியவில்லை.
இந்நிலையில், வெற்றியாளர்களில் ஒருவர் தனது பரிசுத்தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார், மற்ற இருவரும் புதிய வீட்டை வாங்குவதற்கு அதைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்று லொட்டரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.